15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திருவாடானையில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு போலீஸ் பாதுகாப்பு

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைப் பகுயில் பாதுகாப்புப் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.

News image

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைப் பகுயில் பாதுகாப்புப் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.

Updated On :26 மார்ச் 2026, 6:49 pm

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புக் அறையில் வைத்து சீலிடப்பட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 378 வாக்குச் சாவடிகள் உள்ளன. நடைபெறவுள்ள தோ்தலுக்காக 450-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள்ஆகியவை பாதுகாப்பாக வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.

இவை அனைத்தும் திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் அருகேயுள்ள பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறை முழுவதும்

சீலிடப்பட்டது. மேலும், அறையைச் சுற்றி நான்கு புறங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸாா் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.