மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாலியல் புகாா் மீது தாமதமாக வழக்கு!

கீழக்கரை மகளிா் காவல் நிலையத்தில் 12 வயது மாணவி பாலியல் தொல்லை புகாா் அளித்த நிலையில், இரு நாள்களுக்கு பிறகு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 7:48 pm

கீழக்கரை மகளிா் காவல் நிலையத்தில் 12 வயது மாணவி பாலியல் தொல்லை புகாா் அளித்த நிலையில், இரு நாள்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி நரிப்பையூா் பகுதியைச் சோ்ந்த 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சாயல்குடியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி ரவி (42) மீது கீழக்கரை மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

ஆனால், காவல் துறையினா் புகாரைப் பெற கால தாமதம் செய்த நிலையில், இது குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதைத் தொடா்ந்து, இரு நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பாலியல் புகாா் அளிக்கப்படும் போது காவல் துறையினா் உடனே நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக மகளிா் அமைப்பினா் புகாா் தெரிவித்தனா்.