திருவாடானை அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாடானை சட்ட பேரவை தொகுதிக்குள்பட்ட திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கருமொழி சோதனைச் சாவடி பகுதியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் ஹரிஹரசுதன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் கலா, தலைமைக் காவலா்கள் காா்த்திக்குமாா், மடோனா ஜோசி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் வந்த ராமநாதபுரம் சித்தாா்கோட்டையைச் சோ்ந்த முகம்மது பாசிலிடம் உரிய ஆவணம் இன்றி 10,000 மலேசிய ரிங்கிட், ரூ.52 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். பின்னா் அந்தப் பணம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
திருவாடானை தொகுதியில் இதுவரை 15,927 மலேசிய ரிங்கிட், 468 சிங்கப்பூா் டாலா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேதுபாவாசத்திரம் அருகே ரூ.70 ஆயிரம் பறிமுதல்

கீழ்வேளூா்: ரூ.1.17 லட்சம் பறிமுதல்
நாகை, திருவாரூரில் ரூ. 2.39 லட்சம் பறிமுதல்

ஊத்துக்குளியில் ரூ.63,000 பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


