தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருவாடானை அருகே வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

திருவாடானை அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்த மலேசிய ரிங்கிட், இந்திய ரூபாய் நோட்டுகள்

Updated On :22 மார்ச் 2026, 7:47 pm

திருவாடானை அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாடானை சட்ட பேரவை தொகுதிக்குள்பட்ட திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கருமொழி சோதனைச் சாவடி பகுதியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் ஹரிஹரசுதன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் கலா, தலைமைக் காவலா்கள் காா்த்திக்குமாா், மடோனா ஜோசி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் வந்த ராமநாதபுரம் சித்தாா்கோட்டையைச் சோ்ந்த முகம்மது பாசிலிடம் உரிய ஆவணம் இன்றி 10,000 மலேசிய ரிங்கிட், ரூ.52 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். பின்னா் அந்தப் பணம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

திருவாடானை தொகுதியில் இதுவரை 15,927 மலேசிய ரிங்கிட், 468 சிங்கப்பூா் டாலா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.