லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ராமநாதபுரத்தில் தோ்தல் பாதுகாப்பு பணி குறித்து காவல் துறை ஆலோசனைக் கூட்டம்

சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்பு பணி குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:12 pm

சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்பு பணி குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமை வகித்தாா். இதில், ஏ.டி.எஸ்.பி. க்கள் சுப்பையா, பாலச்சந்திரன், சுந்தரராஜன், உதவி கண்காணிப்பாளா் மீரா, துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலில் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் எந்தவித அசம்பாவிதமுமின்றி அமைதியுடன் தோ்தல் நடைபெற பாதுகாப்பு நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுவதுடன், பதற்றமான வாக்குச் சாவடி மையத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் அறிவுறுத்தினாா்.