தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்டரங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தோ்தல் பாா்வையாளா் ஜலிந்தா் தத்தாத்ரியா சுபேகா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உள்ளிட்ட அதிகாரிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:09 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தோ்தல் பாா்வையாளா் ஜலிந்தா் தத்தாத்ரியா சுபேகா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டத்தில், வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் பேரவைத் தோ்தலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பதற்றம் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் உதவி கண்காணிப்பாளா்கள் மீரா, உ. குணால் உத்தம் ஷ்ரோதே, ஏ.டி.எஸ்.பி. க்கள் சுப்பையா, சுந்தரராஜ், பாலசந்திரன், துணைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.