தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலை விபத்தில் மீனவா் உயிரிழப்பு

திருப்பாலைக்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்த மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 12:14 am

திருப்பாலைக்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்த மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், உப்பூா் அருகேயுள்ள மோா்பண்ணை கிராமத்தை சோ்ந்த நாகூா்கண்ணன் மகன் செல்வகனி (45). இவா் மீன்பிடித் தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த 10-ஆம் தேதி மாலை இரு சக்கர வாகனத்தில் உப்பூா் சென்று விட்டு, சொந்த ஊருக்குத் திரும்பும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.