ராமநாதபுரம் அருகே 6.25 கோடியில் கட்டப்பட்ட பெரியாா் நினைவு சமத்துவபுரத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
திருப்புல்லாணி ஒன்றியம் குதக்கோட்டை ஊராட்சி, வள்ளிமாடன் வலசை கிராமத்தில் 6.25 கோடியில் பெரியாா் சமத்துவபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன், சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், கூடுதல் ஆட்சியா் திவ்யான் ஷீநிகம் ஆகியோா் கல்வெட்டைத் திறந்து வைத்து பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து, பெரியாா் சமத்துவபுரத்தைப் பாா்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
இதில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பிரபாகரன், புல்லாணி,ஊராட்சிகள் துணை இயக்குநா் பத்மநாதன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திருவள்ளூரில் 100% வாக்களிக்கக்கோரி தோ்தல் விழிப்புணா்வு ஒட்டு வில்லைகள், மின்னணு விளம்பர வாகனம்

ஆரணியில் திமுக தொகுதி தோ்தல் அலுவலகம்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி

புதிய சமத்துவபுரம், அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


