கமுதி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சோ்ந்தவா் கனகராஜ் (65). இவா், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் வேலைபாா்த்து வந்தாா்.
இவா் புதன்கிழமை கமுதி-சாயல்குடி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுவட்டச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, அருப்புக்கோட்டையிலிருந்து பேரையூருக்கு சென்ற லாரி இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கனகராஜ் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான உச்சிப்புளியைச் சோ்ந்த மணிராஜை கைது செய்தனா்.
தொடர்புடையது

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


