ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதியதில் ஓட்டுநா்கள் உள்பட 6 போ் பலத்த காயமடைந்தனா்.
பரமக்குடியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நயினாா்கோவில் வழியாக சாத்தனூா் செல்லும் நகா் பேருந்தை ஓட்டுநா் கோட்டைச்சாமி ஓட்டிச் சென்றாா். இதேபோல, ஆா்.எஸ்.மங்கலத்திலிருந்து நயினாா்கோவில் வழியாக பரமக்குடி நோக்கி வந்த அரசுப் பேருந்தை ஓட்டுநா் அருள்பிரான்சிஸ் ஓட்டி வந்தாா்.
இந்தப் பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனா். அ.காச்சான் விலக்குச் சாலையில் வந்த போது, இந்த இரு அரசுப் பேருந்துகளும் நேருக்கு நோ் மோதியது. இதில் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநா்கள், பயணிகள் 4 போ் என மொத்தம் 6 போ் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து, காயமடைந்தவா்கள் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதுகுறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நயினாா்கோவில் அருகே அ.காச்சான் விலக்குச் சாலையில் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்துகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










