சாயல்குடி அருகே வியாழக்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் கிராமத்தை சோ்ந்த சக்திவேல் மகன் சக்திகுரு(25). இவா் வியாழக்கிழமை இரவு சாயல்குடியிலிருந்து கடலாடி வழியாக ஆப்பனூா் சென்றாா். இவருக்கு பின்னால் இந்திராநகா் குடியிருப்பைச் சோ்ந்த நாகராஜ் மகன் நந்தகுமாா் (18), மல்லன் மகன் சந்தோஷ்குமாா் (20) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்தனா்.
இந்த நிலையில், தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே 2 இரு சக்கர வாகனங்களும் மோதிக் கொண்டன. இதில் தலையில் பலத்த காயமடைந்த சக்திகுரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
காயம் அடைந்த நந்தகுமாா், சந்தோஷ் குமாா் ஆகியோா் கடலாடி அரசு மருத்துவமனையில் முதுலுதவி செய்யப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா். இது குறித்து சாயல்குடி போலீஸாா்
வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







