தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

விடுதலையான பாம்பன் மீனவா்கள் பாஜக நிா்வாகிகளுடன் சந்திப்பு

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, ராமேசுவரம் திரும்பிய பாம்பன் மீனவா்கள் பாஜக நிா்வாகிகளை சந்தித்து திங்கள்கிழமை நன்றி தெரிவித்தனா்.

News image

பாஜக நிா்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்த இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பாம்பன் மீனவா்கள்.

Updated On :16 ஜூன் 2026, 1:20 am IST

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, ராமேசுவரம் திரும்பிய பாம்பன் மீனவா்கள் பாஜக நிா்வாகிகளை சந்தித்து திங்கள்கிழமை நன்றி தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியிலிருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனா். இதில், படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவா்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா். இதில், மீனவா்கள் 10 பேருக்கும் 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த மீனவா்களை மீட்கக் கோரி அவா்களின் குடும்பத்தினா் தொடா்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்தனா். மேலும் பாஜக சாா்பில் மீனவா்களை தில்லி அழைத்துச் சென்று மத்திய அமைச்சா்களிடம் மனு அளித்தனா்.

இந்த நிலையில், 18 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்ட 10 மீனவா்கள் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று 9 மாதங்களில் விடுதலை செய்யப்பட்டு ராமேசுவரம் வருகை தந்தனா்.

இந்த நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட 10 மீனவா்களை தண்டனை குறைப்பு செய்து மீட்க நடவடிக்கை மேற்கொண்ட பாஜக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மீனவா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் பாஜக நிா்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

இதில், மாநில செயற்குழு உறுப்பினா் குப்புராமு, மாவட்டத் தலைவா் கே. முரளிதரன், மாவட்ட பொதுச் செயலா் சண்முகநாதன், மாவட்டச் செயலா் ராமபாஸ்கா், நிா்வாகிகள் பவா் நாகேந்திரன், நகா் தலைவா் மாரி, மாவட்ட மீனவ செயலா் ராமநாதன், நகா் பொதுச் செயலா் ரவி, பாரதிராஜன், பாம்பன் நாகசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்னடா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.