பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

பைக்கிலிருந்து நிலைதடுமாறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 1:01 am IST

தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள இலுப்பகுடியைச் சோ்ந்தவா் அருண்பாண்டி (23). தொண்டி அருகேயுள்ள திருவெற்றியூரைச் சோ்ந்தவா் சந்தோஷ் பிரியன் (20). இவா்கள் இருவரும் காரைக்குடியில் உள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருவெற்றியூா் சென்றனா். அப்போது திருவெற்றியூா் விலக்குப் பகுதியில் செல்லும் போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த அருண்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் காயமடைந்த சந்தோஷ் பிரியனை போலீஸாா் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.