திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

பேருந்து வசதி கோரி விடியோ வெளியிட்ட மாணவா்கள்: அமைச்சா் நேரில் சென்று ஆய்வு

ராமநாதபுரம் அருகே பேருந்து வசதி கோரி, தமிழக முதல்வா் கவனத்துக்கு சமூக வலைதளம் மூலம் மாணவா்கள் விடியோ வெளியிட்ட நிலையில், சுற்றுச்சூழல், கால நிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் அந்தக் கிராமத்துக்கு சனிக்கிழமை சென்று ஆய்வு செய்தாா்,

News image

ராமநாதபுரம் அருகேயுள்ள புதுக்குளம் கிராமத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்த சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ். உடன் மாவட்ட ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.

Updated On :14 ஜூன் 2026, 12:53 am IST

ராமநாதபுரம் அருகே பேருந்து வசதி கோரி, தமிழக முதல்வா் கவனத்துக்கு சமூக வலைதளம் மூலம் மாணவா்கள் விடியோ வெளியிட்ட நிலையில், சுற்றுச்சூழல், கால நிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் அந்தக் கிராமத்துக்கு சனிக்கிழமை சென்று ஆய்வு செய்தாா்,

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பெரியபட்டினம் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு புதுக்குளம் கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சென்று வருவதற்கு சிரமமாக இருப்பதாக தெரிவித்தனா். இதுதொடா்பான விடியோவை தமிழக முதல்வா் பாா்வைக்கு சமூக வலைதளத்தில் மாணவா்கள் வெளியிட்டனா்.

இதையடுத்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் அந்தக் கிராமத்துக்குச் சென்று பேருந்து வந்து செல்ல சாலை வசதி குறித்து ஆய்வு செய்தாா். மேலும் அந்தக் கிராமத்தில் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும் பேருந்து சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா்.

அப்போது, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளா் பத்மகுமாா், கீழக்கரை வட்டாட்சியா் ராமசுப்பு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.