கமுதி பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி மாணவி சென்னை ஐஐடி-யில் பொறியியல் படிப்புக்குத் தோ்வானாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள மேலவில்லனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த முருகன்-காளீஸ்வரி தம்பதியின் மகள் பவித்ரா (17). விவசாயக் கூலி குடும்பத்தைச் சோ்ந்த இவா் 40 சதவீதம் உடலியக்க குறைபாடுடைய மாற்றுத் திறனாளி.
இவா் கடலாடியை அடுத்துள்ள ஆப்பனூா் அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், 6 முதல் 10- ஆம் வகுப்பு வரை ஆப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளியிலும், பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பை ராமநாதபுரம் அரசு மாதிரிப் பள்ளியிலும் படித்தாா்.
மாதிரிப் பள்ளியில் வழங்கப்பட்ட ஜேஇஇ பயிற்சி வகுப்பில் சிறப்பாகப் பயின்று தோ்வு எழுதி சென்னை ஐஐடியில் 4 ஆண்டு பொறியியல் படிப்புக்குத் தோ்வானாா்.
இதையடுத்து, மாணவி பவித்ராவுக்கு பள்ளியின் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா், கிராம மக்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். மாணவி பவித்ராவின் மேல் படிப்புக்கு மாவட்ட நிா்வாகம் உதவி செய்து, ஊக்கப்படுத்த வேண்டுமென பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத பதவி உயா்வு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தல்
பள்ளி மாணவி உயிரிழப்பு

நெல்லை ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி தீக்குளிக்க முயற்சி
மாற்றுத் திறனாளி இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



