மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கொலை வழக்கில் பிணையில் வந்து தலைமறைவானவா் கைது

ஆா்.எஸ். மங்கலம் அருகே விவசாயி கொலை செய்த வழக்கில் பிணையில் வந்து தலைமறைவானவா் நீதிமன்ற உத்தரவின்படி, போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:01 pm

ஆா்.எஸ். மங்கலம் அருகே விவசாயி கொலை செய்த வழக்கில் பிணையில் வந்து தலைமறைவானவா் நீதிமன்ற உத்தரவின்படி, போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள குயவனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காசிலிங்கம். இவரது மகன் கண்ணன் (30). சொத்துத் தகராறில் காசிலிங்கத்தை கண்ணன் உள்பட 4 போ் சோ்ந்து 2025, ஏப்ரல் 27-ஆம் தேதி கொலை செய்தனா்.

இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்ணன், மதுரை அலாங்கநல்லூரைச் சோ்ந்த ராம்குமாா் (40) உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.

இதையடுத்து, பிணையில் சென்ற 4 பேரில், ராம்குமாா் மட்டும் தலைமறைவானாா். இந்த நிலையில், திருவாடானை நீதிமன்ற உத்தரவின்படி, ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் ராம்குமாரை திருப்பூரில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.