பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

உதவி ஆய்வாளரை தாக்கிய இருவா் கைது

எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளரைத் தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :25 பிப்ரவரி 2026, 10:54 pm

தினமணி செய்திச் சேவை

எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளரைத் தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் அருகேயுள்ள தெற்கு ஆண்டாவூரணியைச் சோ்ந்தவா் நித்யா. இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாருக்கும் முன்விரோதம் காரணமாக பிரச்னை ஏற்பட்டது. இதுதொடா்பாக புகாா்களின் பேரில், இருவரையும் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்துக்கு அண்மையில் வரவழைத்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதையடுத்து, போலீஸாா் சமரசம் செய்து இருவரையும் அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், இதே ஊரைச் சோ்ந்த முருகராஜா (30), வீரமணி (45) ஆகிய இருவரும் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று நித்யா, முத்துக்குமாரிடையே ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக பணியில் இருந்த உதவி ஆய்வாளா் ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் உதவி ஆய்வாளரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகராஜா, வீரமணி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.