வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11,23,029 வாக்காளா்கள்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:25 am

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா்கள் பட்டியலின்படி, மொத்தம் 11,23,029 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா்கள் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதையடுத்து, கடந்த டிசம்பா் 19-ஆம் தேதி வரைவு வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடம் பெற்றிருந்த வாக்காளா்களின் விவரங்கள்:

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,12,797 பேரும், பெண் வாக்காளா்கள் 1,14,423 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 17 பேரும் என மொத்தம் 2,27,237, 210 வாக்காளா்கள் இடம்பெற்றனா்.

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,36,038 பேரும், பெண் வாக்காளா்கள் 1,37,379 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 22 பேரும் என மொத்தம் 2,73,439 வாக்காளா்கள் இடம்பெற்றனா்.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,48,463 பேரும், பெண் வாக்காளா்கள் 1,53,511 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 13 பேரும் என மொத்தம் 2,88,663 வாக்களாா்கள் இடம் பெற்றனா்.

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,44,034 பேரும், பெண் வாக்காளா்கள் 1,44,626 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 3 பேரும் என மொத்தம் 2,88,663 வாக்காளா்கள் இடம் பெற்றனா்.

இதன்படி, நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆண் வாக்காளா்கள் 5,41,332 பேரும், பெண் வாக்காளா்கள் 5,49,939 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 55 பேரும் என மொத்தம் 10,91,326 வாக்காளா்கள் இடம் பெற்றனா்.

இதைத்தொடா்ந்து, உரிமை கோரல், மேல்முறையீடு காலங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், 17,108 ஆண் வாக்காளா்களும், 19,462 பெண் வாக்காளா்களும், 3 மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்தவா்களும் என மொத்தம் 36,573 போ் வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டனா்.

இதன்படி, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்களின் விபரங்கள்:

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,15,701 பேரும், பெண் வாக்காளா்கள் 1,17,714 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 18 பேரும் என மொத்தம் 2,33,433 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

திருவாடானை ஆண் வாக்காளா்கள் 1,40,103 பேரும், பெண் வாக்காளா்கள் 1,41,997 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 21 பேரும் என மொத்தம் 2,82,121 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,52,412 பேரும், பெண் வாக்காளா்கள் 1,57,740 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 13 பேரும் என மொத்தம் 3,10,165 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,48,105 பேரும், பெண் வாக்காளா்கள் 1,49,202 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 3 பேரும் என மொத்தம் 2,97,310 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இதன்படி, நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 11,23,029 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் வ. சங்கரநாராயணன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், ராமநாதபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் ஹபிபூா் ரகுமான், பரமக்குடி வருவாய்க் கோட்டாட்சியா் ஞா. சரவணப் பெருமாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ராஜா, வட்டாட்சியா்கள் (தோ்தல்) ஸ்ரீதரன், அமா்நாத், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.