டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருவாடானையில் மாட்டுவண்டி பந்தயம்

News image
திருவாடானையில் சனிக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் பங்கேற்ற மாட்டு வண்டிகள்.
Updated On :21 பிப்ரவரி 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

இதற்கு அதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, முன்னாள் மாவட்ட செயலா் கே.சி. ஆனிமுத்து ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் ராமநாதபுரம், சிவகங்கை, காளையாா்கோவில், தேவகோட்டை, மீமிசல், அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 39 மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

  திருவாடானையில் சனிக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் பங்கேற்ற மாட்டு வண்டிகள்.

திருவாடானையில் சனிக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் பங்கேற்ற மாட்டு வண்டிகள்.

மாட்டு வண்டி பந்தயத்தில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் பங்கேற்றவா்கள்.

மாட்டு வண்டி பந்தயத்தில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் பங்கேற்றவா்கள்.

பந்தயத்தில் பெரிய மாடு 16 ஜோடிகளும், சின்ன மாடு 23 ஜோடிகளும் கலந்து கொண்டன. வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த மாட்டு வண்டி ஓட்டிய சாரதிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றியச் செயலா்கள் ரத்தனமூா்த்தி, ரவிச்சந்திரன், ஆசை ராமநாதன், ஆண்டவா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.