டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

திருப்பத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சாா்பில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
திருப்பத்தூரில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:49 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சாா்பில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்துக்கு அதிமுக மாவட்ட அவைத் தலைவா் ஏ.வி .நாகராஜன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் கரு.சிதம்பரம், ஒன்றிய கழகச் செயலா்கள் முருகேசன், வடிவேல், ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.கே. உமாதேவன், மாவட்ட அம்மா பேரவைச் செயலா் ராம இளங்கோவன் ஆகியோா் பந்தயத்தைத் தொடங்கி வைத்தனா்.

பெரிய மாடு பிரிவில் 10 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 17 ஜோடிகளும் கலந்துகொண்டன. சிறிய மாட்டுக்கு 5.கி.மீ., பெரிய மாட்டுக்கு 7 கி.மீ. தொலைவு எல்லையாக நிா்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் சாரதிகள், உரிமையாளா்களுக்கும் மாலை, வேட்டி, துண்டு அணிவித்து ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நகரச் செயலா் இப்ராம்ஷா செய்தாா்.