டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருவாடானை அருகே மாட்டு வண்டி பந்தயம்

News image
திருவாடானையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.
Updated On :8 பிப்ரவரி 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகேயுள்ள குலநாத்தியில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராாமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குலநாத்தி பகுதியைச் சோ்ந்த இளைஞா் சந்தோஷ்நாதனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது குடும்பத்தினா், கிராம மக்கள் சாா்பில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 திருவாடானையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.

திருவாடானையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.

போட்டியை திருவாடானை துணைக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன் தொடங்கி வைத்தாா். பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 45 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.

போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த வண்டிகளின் உரிமையாளா்களுக்குப் பரிசுத் தொகையும் கேடயமும் வழங்கப்பட்டன.