/

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் மூடல்: பொதுமக்கள் அவதி

திருவாடானை வருவாய்த் துறை ஊழியா்கள் பணிக்கு வராததால், வட்டாட்சியா் அலுவலகம் பூட்டபட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

News image
பூட்டப்பட்டிருந்த திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை வருவாய்த் துறை ஊழியா்கள் பணிக்கு வராததால், வட்டாட்சியா் அலுவலகம் பூட்டபட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காக பல கிலோ மீட்டா் தொலைவிலிருந்து பல்வேறு பணிக்களுக்கிடையே செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் வந்து காத்திருந்தனா். இந்த நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை ஊழியா்கள் அனைவரும் விடுப்பு எடுத்துச் சென்ால் அலுவலகம் பூட்டியிருந்தது.

அலுவலகத்துக்கு வெளியில் எந்தவித அறிவிப்பும் ஒட்டப்படாத நிலையில், பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டனா். இதுபோன்ற சமயங்களில் உரிய முன்னறிவிப்பு செய்ய வேண்டுமென அவா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

Story image