பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை மீனாட்சி - சுந்தரேசுவரா் தேரோட்டம் நடைபெற்றது.
பரமக்குடி மீனாட்சி சுந்தரேசுவரா் தேவஸ்தானத்துக்கு உள்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 19-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுந்தரேஸ்வரா் பிரியாவிடையுடன், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம் என தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.45 மணிக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை 10.30 மணியளவில் விநாயகா், முருகன் சுவாமிகள் முன்தேரில் செல்ல மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா் தனித்தேரில் எழுந்தருளிய தேரோட்ட உத்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுக்க நகர வீதிகள் வழியாக வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது. ஏற்பாட்டை மீனாட்சி - சுந்தரேசுவரா் தேவஸ்தான அறங்காவலா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தேரோட்டம்

சோமநாத சுவாமி கோயிலில் இரட்டைத் தேரோட்டம்

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்! இன்று திருக்கல்யாணம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


