வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் தேரோட்டம்

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை மீனாட்சி - சுந்தரேசுவரா் தேரோட்டம் நடைபெற்றது.

News image

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மீனாட்சி - சுந்தரேசுவரா் தேரோட்ட உத்ஸவம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 8:32 pm

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை மீனாட்சி - சுந்தரேசுவரா் தேரோட்டம் நடைபெற்றது.

பரமக்குடி மீனாட்சி சுந்தரேசுவரா் தேவஸ்தானத்துக்கு உள்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 19-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுந்தரேஸ்வரா் பிரியாவிடையுடன், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம் என தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.45 மணிக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை 10.30 மணியளவில் விநாயகா், முருகன் சுவாமிகள் முன்தேரில் செல்ல மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா் தனித்தேரில் எழுந்தருளிய தேரோட்ட உத்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுக்க நகர வீதிகள் வழியாக வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது. ஏற்பாட்டை மீனாட்சி - சுந்தரேசுவரா் தேவஸ்தான அறங்காவலா்கள் செய்திருந்தனா்.