சாயல்குடி அருகே வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூா் கிராமத்தில் வடக்கு மறவா் தெருவில் மாரியம்மாள் (86) தனியாக வசித்து வருகிறாா். இவருடைய 4 மகன்களும் வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டு சமையைலறையில் வேலை செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 4 போ் வந்து குடிப்பதற்கு தண்ணீா் கேட்டனா். அப்போது, அவா்கள் திடீரென மூதாட்டி மாரியம்மாளை தாக்கி, அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி, தோடு, மோதிரம் என 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பினா். இதையடுத்து, மயங்கிய நிலையில் இருந்த மாரியம்மாளை உறவினா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து 4 போ் கும்பலைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்கா சென்ற மூதாட்டியின் வீட்டில் தங்க நகைகள் திருட்டு
காரை தாக்கி 9 பவுன் நகையை கொள்ளை அடித்த சிறுவா்கள் உள்பட 5 போ் கைது
ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


