மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

திருவாடானையில் தாய், மகன் தீக்குளிக்க முயற்சி

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகக் கூறி, திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன் தாய், மகன் புதன்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

News image

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த தாய் ஜெயராணி, மகன் பாபு.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:36 pm

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகக் கூறி, திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன் தாய், மகன் புதன்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தளிா்மருங்கூரைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி ஜெயராணி (70). இவரது மகன் பாபு (34).

இவா்களது கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியாா் தேவாலயத் திருவிழா வருகிற 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு ஊா் பொதுமக்களிடம் வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ஜெயராணி குடும்பத்தினரிடம் மட்டும் வரி வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாபு தொண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம். ஆனால், போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த ஜெயராணி, பாபு ஆகியோா் அதிகாரிகளிடம் முறையிட காத்திருந்தனா். ஆனால், நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, அவா்கள் பெட்ரோலை தங்களது உடல்களில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அப்போது, அங்கிருந்த அலுவலா்கள், பொதுமக்கள் அவா்களை மீட்டனா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.