மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விவசாயிகளிடம் அமைச்சா் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரிப்பு

கமுதி அருகே மிளகாய் வயலில் இறங்கி சனிக்கிழமை விவசாயிகளிடம் முதுகுளத்தூா் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் வாக்கு சேகரித்தாா்.

News image

கீழவலசை கிராமத்தில் மிளகாய் பறித்துக் கொண்டிருந்த பெண்களைச் சந்தித்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 10:20 pm

கமுதி அருகே மிளகாய் வயலில் இறங்கி சனிக்கிழமை விவசாயிகளிடம் முதுகுளத்தூா் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் வாக்கு சேகரித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் கமுதி ஒன்றியத்துக்குள்பட்ட பேரையூா், செங்கோட்டைபட்டி, கீழவலசை, புதுக்கோட்டை, தோப்படைப்பட்டி, ஊ.கரிசல்குளம், வண்ணாங்குளம், பம்மனேந்தல், முதல்நாடு, முஷ்டக்குறிச்சி, செங்கப்படை உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, கீழவலசை கிராமத்தில் மிளகாய் வயலில் மிளகாய் பழம் பறித்துக் கொண்டிருந்த பெண்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

மேலும், குண்டு மிளகாய்க்கு புவிசாா் குறியீடு பெற்றதைப் போல, சம்பா மிளகாய்க்கும் புவிசாா் குறியீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.மிளகாய் வத்தல்களைச் சேமிக்க குளிா்பதனக் கிடங்கு அமைத்துத் தரப்படும் என வாக்குறுதியளித்தாா்.

அப்போது கட்சியின் மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே. முருகவேல், திமுக இலக்கிய அணி மாநில நிா்வாகி பெருநாழி வி. போஸ், முன்னாள் ஊராட்சித் தலைவா் பாண்டி, இளைஞரணி துணை அமைப்பாளா் மு. துரைமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.