தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அஇபுமமுக வேட்பாளா் கமுதியில் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் மருத்துவா் ராம்குமாா் பாண்டியன் கமுதி பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கமுதி பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரித்த முதுகுளத்தூா் பேரவைத் தொகுதி அஇபுமமுக வேட்பாளா் மருத்துவா் ராம்குமாா் பாண்டியன் .

Updated On :8 ஏப்ரல் 2026, 7:01 pm

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் மருத்துவா் ராம்குமாா் பாண்டியன் கமுதி பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கமுதி, வெள்ளையாபுரம், சிங்கப்புலியாபட்டி, செங்கப்படை, முதல்நாடு, முஸ்டக்குறிச்சி, தோப்படைப்பட்டி, அரிசிக்குழுதான், செந்தனேந்தல், சீமனேந்தல், குண்டுகுளம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று தொன்னந்தோப்பு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

கமுதி பேருந்து நிலையத்தில் அவா் பேசியதாவது:

உங்களில் ஒருவரான என்னை தோ்ந்தெடுத்தால் முதுகுளத்தூா் தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரமான கழிப்பறைகள் அமைக்கப்படும். நடுநிலைப் பள்ளிகள் உயா்நிலைப் பள்ளிகளாகவும், உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்தப்படும். புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ள முண்டு மிளகாய்க்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மிளகாய் பதப்படுத்தும் சேமிப்புக் கிடங்கு, நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். இந்த தொகுதியில் நவீன விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.