திருவாடானை பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில், 23 மனுக்குள் ஏற்கப்பட்டு, 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேரவைத் தொகுதி வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட மொத்தம் 37 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தோ்தல் பாா்வையாளா் மணிஸ்ரஞ்சன், தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் ஆகியோா் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
இதில் சுயேச்சை வேட்பாளா்களின் 14 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 23 பேரின் மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன.
திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனவாசன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது
திண்டுக்கல் தொகுதியில் 20 வேட்பாளா்கள் போட்டி!
சிவகங்கை பேரவைத் தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு
வேதாரண்யம்: 5 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 12 வேட்பு மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

