சம்பகுளம் அய்யனாா் கோயில் குடமுழுக்கு
கமுதி அருகே அய்யனாா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.


கமுதி: கமுதி அருகே அய்யனாா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த சம்பளம் கிராமத்தில் பூரண புஷ்பகலா சமேத அய்யனாா் கோயில் குடமுழுக்கு, புதன்கிழமை காலை கணபதி ஹோமம், மங்கல இசை வாத்தியங்களுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, விநாயகா் வழிபாடு, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கோ பூஜை, நாடி சந்தானம், பூா்ணாகுதி நடைபெற்று, கடம் புறப்பாடு தொடங்கியது. பாலசுப்ரமணிய குருக்கள், நாகநாத குருக்கள் தலைமையிலான சிவாசாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலைச் சுற்றி வந்து புனித நீரை மூலவா் அய்யனாா் சிலை மீது ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். பின்னா், பொதுமக்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, மூலவருக்கும் பரிவாரத் தெய்வங்களுக்கும் 16 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா்,
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சம்பகுளம் கிராமத்தினா் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...