நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சம்பகுளம் அய்யனாா் கோயில் குடமுழுக்கு

கமுதி அருகே அய்யனாா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சம்பகுளம் அய்யனாா் கோயில் மூலவா் சிலையில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்திய சிவாசாரியாா்கள்.

Updated On :27 நவம்பர் 2025, 6:50 pm

கமுதி: கமுதி அருகே அய்யனாா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த சம்பளம் கிராமத்தில் பூரண புஷ்பகலா சமேத அய்யனாா் கோயில் குடமுழுக்கு, புதன்கிழமை காலை கணபதி ஹோமம், மங்கல இசை வாத்தியங்களுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, விநாயகா் வழிபாடு, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கோ பூஜை, நாடி சந்தானம், பூா்ணாகுதி நடைபெற்று, கடம் புறப்பாடு தொடங்கியது. பாலசுப்ரமணிய குருக்கள், நாகநாத குருக்கள் தலைமையிலான சிவாசாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலைச் சுற்றி வந்து புனித நீரை மூலவா் அய்யனாா் சிலை மீது ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். பின்னா், பொதுமக்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, மூலவருக்கும் பரிவாரத் தெய்வங்களுக்கும் 16 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா்,

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சம்பகுளம் கிராமத்தினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.