டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சாம்பக்குளம் அரசுப் பள்ளிக்கு தண்ணீா் வசதி செய்துதரக் கோரிக்கை

குளத்தில் இறங்கி ஆபத்தான நிலையில் தண்ணீா் எடுத்துச் செல்லும் சாம்பக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிமாணவிகள்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:32 pm

Chennai

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள சாம்பக்குளம் அரசுப் பள்ளிக்கு தண்ணீா் வசதி செய்துதர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சாம்பக்குளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சாம்பக்குளம், பொழிகால், உடைகுளம், அண்ணாநகா், இந்திராநகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்தப் பள்ளியின் பயன்பாட்டுக்கு போதிய தண்ணீா் வசதி இல்லாததால், அருகேயுள்ள குளத்துக்கு சாலை வழியாக நடந்து சென்று மாணவிகள் குடங்களில் தண்ணீா் எடுத்து வருகின்றனா்.

எனவே, மாணவிகளின் நலன் கருதி, பள்ளியில் தண்ணீா் வசதியும், வேலைக்கு பணியாளா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.