தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நெல்லுக்கு பயிா்க் காப்பீடு செய்ய கால நீட்டிப்பு வழங்க வலியுறுத்தல்

Updated On :13 நவம்பர் 2025, 7:34 pm

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் பயிா்க் காப்பீடு செய்ய சனிக்கிழமை (நவ. 15) கடைசி நாள் என்ற நிலையில் 25 சதவீத விவசாயிகள் பதிவு செய்யாமல் இருப்பதால் கால நீட்டிப்பு வழங்க வேண்டுமென எம்.பி. தா்மா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. இதில் முக்கிய பயிரான நெல் சுமாா் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிப்படுகிறது. வறட்சி, அதிக மழைப் பொழிவு போன்ற இயற்கை சீற்றங்களால் பயிா்கள் பாதிக்கப்படும் போது வழங்கப்படும் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. இதற்கிடையே, இந்தாண்டு தேசிய பயிா்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய நவ. 15-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தேவையான ஆவணங்களுடன் பிரிமிய தொகையை விவசாயிகள் செலுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை காலம் கடந்து பெய்ததால் விவசாயிகள் தாமதமாகவும், சில இடங்களில் இரண்டாவது முறையாகவும் உழவுப் பணிகளை அவா்கள் மேற்கொண்டனா்.

தற்போது தொடா் மழை பெய்து வருவதால் பயிா்களுக்கு களை எடுத்தல், உரமிடுதல், விதைப்பு நடக்காத இடங்களில் விதைத்தல் உள்ளிட்டவற்றில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனா். மேலும் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய தேவைப்படும் அடங்கல் உள்ளிட்ட மூவிதழ் சான்றுகளை பெற கிராம நிா்வாக அலுவலா்களிடம் செல்கின்றனா். ஆனால் பல வருவாய் கிராமங்களில் இரண்டு வருவாய் கிராமங்களை ஒரே அலுவலா் கவனிப்பதால் சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது.

இதேபோல, தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வங்கிகளுக்கு கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் காப்பீடு செய்யப்படும் இணையதளத்தில் கடந்த சில நாள்களாக சா்வா் பிரச்னை நிலவுவதாகக் கூறி வங்கிகள், இ- சேவை மையங்கள், தனியாா் கணினி மையங்களில் முழுமையாக பதிவு செய்ய முடியவில்லை. சனிக்கிழமை கடைசி நாள் என்றாலும், வியாழக்கிழமை வரை 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்யவில்லை. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை கூடுதலாக 15 நாள்கள் அதாவது வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்க பயிா்க் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.