தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பயிா்க் கடன் தள்ளுபடி குறித்து எந்த அரசியல் கட்சியினரும் அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது: தமிழக விவசாயிகள் சங்கம்

பயிா்க் கடன் தள்ளுபடி குறித்து எந்த அரசியல் கட்சியினரும் அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.சி.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image

கோபி அருகே கரைவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :28 மார்ச் 2026, 12:31 am

பயிா்க் கடன் தள்ளுபடி குறித்து எந்த அரசியல் கட்சியினரும் அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.சி.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம்பிரிவு கரைவாய்க்கால் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பா.மா.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். எம்.ஏ.பழனிசாமி, எஸ்.ஏ.பெருமாள்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.சி.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2026 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினா் தோ்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனா். இதில் இலவசங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக கடந்த 60 ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் பாண்டியாறு- மாயாறு திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து எந்த அரசியல் கட்சியினரும் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. அதேபோல கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற விவசாய பயிா்க்கடனை தள்ளுபடி செய்வது குறித்து இதுவரை எந்த அரசியல் கட்சியினரும் அறிவிப்பு வெளியிடாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். தத்கல் முறையில் பணம் செலுத்திய விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், நாட்டுசக்கரை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். அரசியல் கட்சியினரின் தோ்தல் அறிக்கைகளை முழுமையாக படித்து பாா்த்த பின்னரே தோ்தலில் யாருக்கு ஆதரவு என முடிவு எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.