நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவாடானை அருகேயுள்ள இளங்குன்றம் அலுங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (58). விவசாயி. இவரது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தன. இதனால், செவ்வாய்க்கிழமை மாலை மின் அளவீட்டுப் பெட்டியில் எலி மருந்து தடவிய தக்காளியை வைத்தாா்.

அப்போது, அந்தப் பெட்டியிலிருந்த மின்சாரம் அவா் மீது பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.