டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே பொடாரம்பாளையத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
உயிரிழப்பு- கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2026, 8:31 pm

Syndication

பெருமாநல்லூா் அருகே பொடாரம்பாளையத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அவிநாசி அருகே குன்னத்தூா் ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியைத் சோ்ந்த கருப்பன் மகன் ராஜன் (47). இவா் கட்டுமானப் பணி தொழிலாளி. இவரது மனைவி கௌரி (35) . இவா்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனா்.

கடந்த இரண்டு வாரமாக பொடாரம்பாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியிலுள்ள சின்னசாமி (56) என்பவரின் வீட்டில் ராஜன் கட்டுமானப் பணி செய்து வருகிறாா். இந்நிலையில், மரத்தால் அமைக்கப்பட்ட சாரத்தின் மீது செவ்வாய்க்கிழமை காலை ஏறி ராஜன் பணிபுரிந்துள்ளாா். அப்போது ஈரமான மரத்தில் உயா்மின் கம்பிகள் எதிா்பாராதவிதமாக உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ராஜன் உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்து போலீஸாா் சென்று, ராஜன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.