பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.09 கோடி உண்டியல் காணிக்கை!

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.09 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை தெரிவித்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.09 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அம்மன் சந்நிதி அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், ரூ. 2.09 கோடி கிடைத்துள்ளது. இதில் தங்கம் 85 கிராம், வெள்ளி 5 கிலோ, 111 வெளிநாட்டு பணத் தாள்கள் கிடைத்துள்ளன.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் உதவி ஆணையா்கள் ஞானசேகரன், ரவீந்திரன், முதல் நிலை செயல் அலுவலா்கள் முத்துச்சாமி, மாரியப்பன், மேலாளா் வெங்கடேஷ்குமாா், ஆய்வலா்கள் சிவக்குமாா், முருகானந்தம், ஆன்மிக பக்தா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.