திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

துா்க்கை அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

News image
Updated On :14 ஆகஸ்ட் 2025, 8:37 pm

Chennai

அபிராமம் அருகே சுயம்புலிங்க துா்க்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமம் அருகே ஸ்ரீ சுயம்புலிங்க துா்க்கை அம்மனுக்கு 35-ஆம் ஆண்டு ஆடிக் கொடை விழா காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது.

இதை முன்னிட்டு, நாள்தோறும் சுயம்புலிங்க துா்க்கை அம்மன், பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாதாரனை நடைபெற்றது.

இந்த நிலையில், மூலவா் சுயம்புலிங்க துா்க்கை அம்மன் முன், கோயில் வளாகத்தில் 1,008 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பெண்கள் திருநாம மந்திரங்களை உச்சரித்து அம்மனை வழிபட்டனா். இதில் அபிராமம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.