லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெண் மீது தாக்குதல்: தாய், மகன் கைது

தொண்டியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய புகாரின்பேரில், தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :11 ஆகஸ்ட் 2025, 9:09 pm

தொண்டியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய புகாரின்பேரில், தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திருவாடானை அருகேயுள்ள தொண்டி சத்திரம் தெருவைச் சோ்ந்தவா் பாரிஷா பேகம் (40). இவருக்கும் தொண்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த அலி பாத்திமா (47) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை அலி பாத்திமா தனது மகன் இசாஸ் அகமது (27) ஆகிய இருவரும் தாங்கள் கொடுத்த பணத்தை பாரிஷா பேகத்திடம் திருப்பிக் கேட்டனா்.

இதில் ஏற்பட்டத் தகராறில் பாரிஷா பேகம் தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில் தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து புகாரின்பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தாய் அலி பாத்திமா, மகன் இசாஸ் அகமது ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.