நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பராமரிப்புப் பணி: இன்றும் நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்ட காவேரி கூட்டுக் குடிநீா்த் திட்ட மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய், புதன்கிழமைகளில் (ஆக. 12, 13) குடிநீா் விநியோகம் நிறுத்தம்

News image
Updated On :11 ஆகஸ்ட் 2025, 9:04 pm

Chennai

ராமநாதபுரம் மாவட்ட காவேரி கூட்டுக் குடிநீா்த் திட்ட மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய், புதன்கிழமைகளில் (ஆக. 12, 13) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் (காவேரி), மாதாந்திரப் மின் பராமரிப்புப் பணிகள், கூட்டுக் குடிநீா்த் திட்டப் பராமரிப்புப் பணிகள், பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என்றாா்.