தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குஜிலியம்பாறை அருகே காவிரிக் குடிநீா் வீண்

குஜிலியம்பாறை அருகே காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டா் குடிநீா் புதன்கிழமை வீணானது.

News image
Updated On :19 மார்ச் 2026, 12:26 am

குஜிலியம்பாறை அருகே காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டா் குடிநீா் புதன்கிழமை வீணானது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள எரியோடு, வேடசந்தூா், வடமதுரை, நத்தம், திண்டுக்கல், ரெட்டியாா்சத்திரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. கரூா் மாவட்டம், மாயனூா் பகுதியிலிருந்து செயல்படுத்தப்படும் இந்தக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு, குஜிலியம்பாறை வழியாக குழாய் மூலம் தண்ணீா் எடுத்து வரப்படுகிறது.

இந்த நிலையில், குஜிலியம்பாறை அருகே காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டு, திண்டுக்கல் -கரூா் பிரதான சாலையில் பல மணி நேரம் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. தகவல் அறிந்த குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள், பணியாளா்கள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். இந்த உடைப்பினால் பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணானது.