தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கடத்தப்பட்ட 50 டன் ரேசன் அரிசி லாரிகளுடன் மீட்பு: ஒருவா் கைது

ராமநாதபுரத்தில் 2 லாரிகளில் கடத்தப்பட்ட 50 டன் ரேசன் அரிசியை திங்கள்கிழமை மீட்ட போலீஸாா் ஒருவரை கைது செய்து, 3 பேரை தேடி வருகின்றனா்.

Updated On :2 செப்டம்பர் 2024, 6:30 pm

ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் 2 லாரிகளில் கடத்தப்பட்ட 50 டன் ரேசன் அரிசியை திங்கள்கிழமை மீட்ட போலீஸாா் ஒருவரை கைது செய்து, 3 பேரை தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்வதற்காக ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் 21 பெட்டிகளில் 26,344 டன் அரிசி கடந்த ஆக. 30- ஆம் தேதி ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு வந்து சோ்ந்தது. இதை லாரிகளில் ஏற்றி எடை போட்டு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிக்கு எடுத்துச் செல்லும் பணி நடைபெற்றது. அப்போது இரு லாரிகளில் 50 டன் ரேசன் அரிசியை நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிக்கு எடுத்துச் செல்லாமல் கடத்தப்பட்டதாக ஒப்பந்ததாரா் ரவி ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, நரிப்பையூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சண்முக சுந்தரத்தை போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். அப்போது 50 டன் ரேசன் அரிசியையும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கியில் இறக்கிவிட்டு லாரிகள் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து கடத்திச் செல்லப்பட்ட 50 டன் ரேசன் அரிசியையும், 2 லாரிகளையும் தனிப்படை போலீஸாா் மீட்டனா். இது தொடா்பாக மற்றொரு லாரி ஓட்டுநா் உள்பட 3 பேரை தேடி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.