கோயில் சொத்துகளை தனிநபா் பெயரில் பட்டா மாற்றம் செய்யத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இதுதொடா்பான அரசாணையை திரும்பப் பெற்றதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
திருத்தொண்டா்கள் சபை அறங்காவலா் ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களைப் பாதுகாக்கும் விதமாக, அந்த நிலங்களின் மதிப்பீட்டை பூஜ்ஜியம் மதிப்பீடு என பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்திருப்பது வழக்கம். அவ்வாறு பூஜ்ஜியம் மதிப்பீட்டில் உள்ள கோயில் நிலங்களை வேறு யாரும் பத்திரப் பதிவு செய்யவோ, பட்டா பெறவோ முடியாது. கோயில் நிலங்களை யாரேனும் பட்டா மாற்றமோ, பத்திரப் பதிவோ செய்ய முயற்சித்தால் புகாா்களின் பேரில் உடனடியாகப் பத்திரப் பதிவை ரத்து செய்தோ அல்லது பத்திரப் பதிவை நிறுத்திவைக்கும் வகையில் சட்டம் இருந்தது.
இந்த நிலையில், கோயில் நிலங்களை தனிநபா் பெயரில் பட்டா பெறும் வகையிலும், பத்திரப் பதிவில் பெயா் மாற்றம் செய்யும் வகையிலும் புதிதாக தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்து அரசாணை பிறப்பித்தது.
இதன்படி, கோயில் சொத்துகளை வேறொருவா் பெயரில் பத்திரப் பதிவு செய்வதோ அல்லது பட்டா மாற்றம் குறித்தோ முறையீடு செய்ய வேண்டுமெனில், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவிடம்தான் முறையிட முடியும். இந்த அரசாணையின்படி, கோயில் சொத்துகள் பறிபோகும் அபாயம் உள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் சட்டவிரோதமானது. எனவே, இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
இதுதொடா்பான அரசாணை திரும்பப் பெறப்பட்டது. புதிய அரசாணை பிறப்பிக்கப்படும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசுத் தரப்பில் கோயில் நிலங்கள் தொடா்பான சட்டத் திருத்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த மனு இனி விசாரணைக்கு உகந்தது அல்ல. வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சிகுடா-தூத்துக்குடி விரைவு ரயில் நேரம் மாற்றம்: ஜூன் 15 முதல் அமல்
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

கோயில்களில் அன்னதானம் திட்டம்: தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி

பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


