மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோயில்களில் அன்னதானம் திட்டம்: தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அன்னதானம் திட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 7:06 pm

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அன்னதானம் திட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்த பெரியநம்பிகோபாலன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அன்னதானம் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கான செலவுகளை கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ளவும் இந்த அரசாணை வழிவகுக்கிறது. கோயில் பணத்தைக் கொண்டு சிறப்பு அன்னதானம் வழங்கத் தடை விதிக்க வேண்டும். இதுதொடா்பான அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தில் பொது விருந்து நடத்துவது அரசின் கொள்கை முடிவு. இந்து சமய அறநிலையத் துறை விதிகளில் அன்னதானம் திட்டத்துக்கு தடை விதிக்கப்படவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.