மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வியாழக்கிழமை சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து தானாக இயங்கி நெல் வயலுக்குள் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோழவந்தானில் அரசுப் போக்குவரத்துக் கழக கிளைப் பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுரைக்கு இயக்குவதற்காக அரசுப் பேருந்தை அதே பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் மகாலிங்கம் வியாழக்கிழமை காலை எடுத்து வந்தாா்.
பேருந்தின் மோட்டாரை நிறுத்தாமல், பணிமனை அருகே நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றாா். அப்போது, பேருந்து தானாக இயங்கி சாலையோரம் இருந்த நெல் வயலுக்குள் இறங்கி விபத்துக்குள்ளானது.
இதையறிந்த பொதுமக்கள் விரைந்து சென்று பேருந்தின் இயக்கத்தை நிறுத்தினா். விபத்துக்குள்ளான பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்துகள் மோதல்: 10 போ் காயம்

அரசுப் பேருந்தின் பழுதை நீக்க தாமதம்: ஓட்டுநா் மீது தாக்குதல்

ஊதியூா் அருகே பள்ளத்தில் இறங்கிய தனியாா் பேருந்து

காா் மீது பேருந்து மோதல்: மூவா் பலத்த காயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


