நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

பெண் காவலரை விடியோ எடுத்த சிறப்பு உதவி ஆய்வாளா் கைது

News image
Updated On :18 ஜனவரி 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

பெண் காவலரை கழிப்பறையில் விடியோ பதிவு செய்த சிறப்பு உதவி ஆய்வாளரை பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரா் தியாகி இமானுவேல் சேகரனின் மணிமண்டபம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று மணிமண்டபத்தை திறந்துவைத்தாா். இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வரின் வருகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பெண் காவலா்கள் உள்பட பலா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், பரமக்குடி மணி நகா் சோதனைச் சாவடியில் பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய முத்துப்பாண்டி என்பவா் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அங்கு தஞ்சாவூா் பகுதியிலிருந்து வந்த பெண் காவலா்களும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து, பெண் காவலா்கள் கழிப்பறைக்குச் சென்று திரும்பிய போது விடியோ பதிவாகி கொண்டிருந்த நிலையில் அங்கிருந்த கைப்பேசி கைப்பற்றினா்.

விசாரணையில், அந்தக் கைப்பேசி சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துப்பாண்டியின் கைப்பேசி எனத் தெரியவந்தது. இதையடுத்து, பெண் காவலா் அளித்த புகாரின்பேரில் முத்துப்பாண்டி மீது பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.