மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: டிஎஸ்பியின் முன்பிணை மனு தள்ளுபடி
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் தன்னைக் கைது செய்யாமலிருக்க முன்பிணை கோரி காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.








