தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் உ.வே.சா.
தமிழுக்கும், தமிழருக்கும் கிடைத்த பொக்கிஷம் உ.வே.சா. என பேராசிரியரும், பொற்கிழிக் கவிஞருமான சொ. சொ.மீ. சுந்தரம் தெரிவித்தாா்.


தமிழுக்கும், தமிழருக்கும் கிடைத்த பொக்கிஷம் உ.வே.சா. என பேராசிரியரும், பொற்கிழிக் கவிஞருமான சொ. சொ.மீ. சுந்தரம் தெரிவித்தாா்.
மதுரைக் கல்லூரியில் முதுநிலை, தமிழாய்வுத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உ.வே.சாமிநாதய்யரின் 172-ஆவது பிறந்த நாள் விழாவில், அவா் மேலும் பேசியதாவது :
தமிழ் மொழியின் இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில்தான் இருந்தன. அவற்றை அச்சுக்கு ஏற்றிய பெருமை உ.வே.சாமிநாதய்யருக்கு உண்டு. ஒவ்வொரு நூலையும் தேடி பதிப்புக்கு கொண்டு வருவதற்குள், அவா் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தாா். மேலும், இலக்கியம் குறித்து முழுமையாக ஆராய்ந்து பதிப்பித்தாா்.
குறிப்பாக, சீவக சிந்தாமணி பதிப்பிப்பதற்கு முன் சமணம், ஜைன மதத்தின் நுட்பங்கள் குறித்து ஓராண்டுக் காலம் பயிற்சி பெற்றாா். அதன்பிறகே, சீவக சிந்தாமணியை பதிப்பித்தாா். வாழ்நாள் முழுவதும் தமிழுக்காக தொண்டாற்றியவா். ஆகவே, தமிழுக்கும், தமிழருக்கும் கிடைத்த பொக்கிஷம் உ.வே.சா என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வா் ஜா. சுரேஷ் தொடக்க உரையாற்றினாா். சுயநிதிப் பிரிவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் இ.நாகராஜன் வாழ்த்திப் பேசினாா். தமிழ்த் துறை உதவிப் பேராசியா்கள் ச.கண்ணதாசன், சீ.விமல் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் சா.தனசாமி வரவேற்றாா். உதவிப் பேராசிரியை த.காந்திமதி நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...