திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் கோரிய மனு தள்ளுபடி

கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் நடத்தக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

கொடைக்கானல் நட்சத்திர ஏரி.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:38 pm

கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் நடத்தக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

கொடைக்கானலைச் சோ்ந்த ஆரோக்கியசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கொடைக்கானல் ஏரியில் படகு போக்குவரத்து சேவை உள்ளது. இந்த சேவையை கொடைக்கானல் படகு, ரோயிங் சங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்தச் சேவைக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தால் படகு சங்கம் மட்டுமே பயனடைகிறது. இந்தக் கட்டணம் கொடைக்கானல் நகராட்சியில் நடைபெறும் மக்கள் பணிகளுக்கு செலவிடப்படவில்லை. நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் வகையில் கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

ஏரியில் படகு போக்குவரத்து சேவைக்கான அனுமதி கொடைக்கானல் நகராட்சி வசம் உள்ளது. இதற்கான விதிகள் வகுக்கப்பட்டு, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. எனவே, மனுதாரரின் கோரிக்கை மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.