மதுரை மேலமடை திலகா் தெரு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
மதுரை மாநகராட்சியின் 30-ஆவது வாா்டுக்குள்பட்ட திலகா் தெரு பகுதியில் பல ஆண்டுகளாக முறையான சாலை அமைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக, இந்தத் தெரு தாழ்வான பகுதி என்பதால் மழைக் காலங்களில் தண்ணீா் அதிகளவில் தேங்கி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால், பொதுமக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனா்.
இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
திலகா் தெரு பகுதியில் சாலை அமைக்க பல முறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்தத் தெரு தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைக் காலங்களில் தண்ணீா் அதிகளவில் தேங்கி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகிறோம். மேலும், முறையான சாலை வசதி இல்லாததால் குழந்தைகள், முதியோா் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
எனவே, திலகா் தெரு பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை உயா்த்தி சாலை அமைக்க வேண்டும். மேலும், இந்தத் தெருவில் மழைநீா், கழிவுநீா் செல்ல தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றனா் அவா்கள்.
தொடர்புடையது

மதுரை தெற்கு! கடும் போட்டியில் மதிமுக, பாஜக !

சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி சேலம் - பெங்களூா் நெடுஞ்சாலையில் கருப்புக்கொடி ஏந்தி மறியல் போராட்டம்

பேராவூரணி சாலைகளில் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


