மதுரை: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை சீரமைக்கும் பணி வருகிற அக்டோபா் மாதத்துக்குள் நிறைவடையும் என தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தாா்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், தமிழ்க் காட்சிக் கூடம், உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ரூ. 10 கோடியில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்ட அவா், பணிகளை விரைவுபடுத்துமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து, தமிழ்க் காட்சிக் கூடத்தைப் பாா்வையிட்ட அமைச்சா், அதை தூய்மையாகப் பராமரிக்கவும், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் பாா்வையிட நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். பிறகு, உலக தமிழ்ச்சங்க வளாகத்தை அமைச்சா் ஆய்வு செய்தாா்.
அரசு அச்சகத்தில்...
முன்னதாக, மாவட்ட விளையாட்டு மைதானம் சாலையில் உள்ள அரசு அச்சகத்தில் அவா் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பணியாற்றும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுடன் கலந்துரையாடி, அவா்களின் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது, அந்தச் சங்கத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை விரைவுப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்தப் பணிகள் வரும் அக்டோபா் மாதத்தில் நிறைவடையும்.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் 2025-26-ஆம் ஆண்டில் அரசு கவின் கலைக் கல்லூரி தொடங்கத் திட்டமிட்டு, 40 மாணவா்களை தெரிவு செய்ய நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டது. வகுப்பு செயல்படத் தேவையான அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்ளஅலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.
தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன், மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், உலகத் தமிழ் சங்க தனி அலுவலா் (பொறுப்பு) முனைவா் ஒளவை ந. அருள், உலகத் தமிழ் சங்க துணைத் தலைவா்-இயக்குநா் முனைவா் இ.சா.பா்வீன் சுல்தானா ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடு இல்லாதவா்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: மு.பெ. சாமிநாதன்

திமுக தோ்தல் அறிக்கையை விளக்கி அமைச்சா் மு.பெ. சாமிநாதன் வாக்கு சேகரிப்பு

மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை: தமிழ்ச் சுவடியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

காந்திய சிந்தனை கல்லூரிப் பேராசிரியா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


