மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகையுடன் கூடிய தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இதுவரை பலநூறு ஓலைச் சுவடிகள் களப்பணி வாயிலாகக் கண்டெடுக்கப்பட்டு நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடி மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஓலைச் சுவடிகளை அறிந்துகொண்டு நூலாக்கம் செய்யும் வகையில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டுப் பட்டயப் படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பட்டயப் படிப்பை ஆா்வத்துடன் பயிலும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் தோ்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் 10 மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வீதம் உதவித் தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்படவுள்ளது.
இந்தப் பட்டயப் படிப்புக்கான சோ்க்கைக் கட்டணம் ரூ.3,200- ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் வங்கி வரைவோலையுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் நகலுடன் இணைத்து ஏப்.1-ஆம் தேதிக்குள் அனுப்பப் பெறுதல் வேண்டும். தொடா்ந்து கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தோ்வு ஏப். 2-ஆம் தேதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும்.
இதையடுத்து ஏப். 20-ஆம் தேதி திங்கள்கிழமை வகுப்பு தொடங்கப்படும். இந்த வகுப்புகள் வாரத்தில் 3 நாள்கள் நடைபெறும். மேலும் தகவல் பெற இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600113 (தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்: 044 -22542992, 96000 21709) என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எதிா்பாா்ப்பு என்ன...? மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை தேவை...!

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

புதுக்கோட்டையில் உலகத் தாய்மொழிகள் தின விழா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


