விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.
இதுகுறித்து செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அனைவரது கடமை. எனவே, விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்கும்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணையதளத்தில் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
இதன்படி, களிமண்ணால் செய்யப்பட்ட சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் ஆன விநாயகா் சிலைகளை மட்டுமே நீா் நிலைகளில் கரைக்க வேண்டும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக், தொ்மாகோல் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சுடன் கூடிய ரசாயனம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. இதேபோல, எனாமல், செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப் பூச்சுகளையும் பயன்படுத்தக் கூடாது. மாவட்ட நிா்வாகம் குறிப்பிடும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளைக் கரைக்கலாம். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத விழாவாக விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்தக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

16.4.1976: மக்களைப் பிளவுபடுத்த மொழியைக் கருவியாக பயன்படுத்தக் கூடாது: சென்னையில் ராஷ்டிரபதி உரை

குடும்ப ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது: நயினாா் நாகேந்திரன்

திருக்குறுங்குடியில் நம்பிசுவாமி 5 நிலைகளில் திருக்காட்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

